×

பூட்டை உடைத்து எண்ணெய் திருட்டு

தர்மபுரி, செப்.7: அதியமான்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை அருகே வசித்து வருபவர் ஜான்சன்(51). இவர் நல்லம்பள்ளியில் உள்ள ரேஷன் கடையில் எடையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 25ம் தேதி, கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் 2 நாட்கள் விடுமுறை என்பதால், 28ம் தேதி மீண்டும் கடைக்கு வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த 46 லிட்டர் பாமாயிலை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றிய புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூட்டை உடைத்து எண்ணெய் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Johnson ,Athiyamankot Government Transport Workshop ,Nallampally ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்